• +91 - 9952351588
  • kalviguru2013@gmail.com
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Home
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • >District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Quotes
Flash News:
Squard Form

அரசு பெண் ஊழியர்களின் பேறு காலம், தாய்ப்பால் குறித்து உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

  • 2018-01-03

அரசு பெண் ஊழியர்களின் பேறு காலம் மற்றும் தாய்ப்பால் சட்டம் குறித்து உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பி மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

பிரசவ விடுமுறை எடுத்த பயிற்சி மருத்துவருக்கு பட்ட மேற்படிப்பில் சேர விதிகளைக் காரணம் காட்டி மறுத்த அரசுக்கு எதிராகப் பயிற்சி மருத்துவர் தொடர்ந்த வழக்கில், அரசின் பதிலை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், அடுத்த ஆண்டு சம்பந்தப்பட்ட பயிற்சி மருத்துவரை நேரடியாகத் தேர்வு செய்ய உத்தரவிட்டு, மகப்பேறு விடுப்பு, தாய்ப்பால் சட்டம் உள்ளிட்ட அடுக்கடுக்கான 13 கேள்விகளை எழுப்பினார்.

அவை வருமாறு:

இந்த வழக்கில் நீதிபதி சில பொதுக் கருத்துகளை கேள்வியாக வைத்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து. இந்தியாவில் தாய்ப்பால் கொடுப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் 99,500 குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு பலியாகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பது அதிகமாகி உள்ளது.

ஐஸ்வர்யா வழக்கை முடித்துவைத்த நீதிபதி, பெண்களின் பேறுகால விடுப்பு மற்றும் தாய்பாலின் அவசியம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக மத்திய மாநில அரசுகளை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டார்.

1. மத்திய அரசு வழங்கும் பேறுகால விடுப்பை தமிழக அரசு போல 6 மாதத்திலிருந்து ஏன் 9 மாதமாக உயர்த்தி வழங்கக்கூடாது?

2. மத்திய அரசைப் போல பேறுகால விடுப்பை 6 மாதங்களாக உயர்த்தாத மாநிலங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் உயர்த்த வேண்டுமென மாநில அரசுகளுக்கு ஏன் அறிவுறுத்தக்கூடாது?

3. தேசிய நலன் கருதி மாநிலப் பட்டியலில் உள்ள பேறுகால விடுப்பையும், குழந்தைகளுக்கான தாய்ப்பாலுக்கான உரிமையையும் மத்திய அரசு ஏன் கையாளக்கூடாது?

4. குறைந்தபட்சம் 6 மாதத்திலிருந்து 2 வருடம் வரையில் தாய்ப்பால் குடிப்பதை பிறந்த குழந்தையின் அடிப்படை உரிமையாக ஏன் நீதிமன்றம் அறிவிக்க கூடாது?

5. மத்திய மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கவனிக்கவும், உணவளிக்கவும் காப்பக வசதி செய்யப்பட்டுள்ளதா?

6. பிரசவ கால சிக்கலை கருத்தில்கொண்டு சிறப்பு காப்பீட்டு திட்டங்களை ஏன் மத்திய மாநில அரசுகள் உருவாக்கக் கூடாது?

7. மக்கள்தொகை உயர்வை கருத்தில்கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு பேறுகால விடுப்போ, பயன்களோ கிடையாது என பெண் ஊழியர்களிடம் உத்தரவாதம் எழுதி வாங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?

8. அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஏன் விதிகளை உருவாக்கக் கூடாது?

9. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோய் ஒழிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பேறுகால விடுப்பை பயன்படுத்துபவர்கள் ஏன் அந்த விடுப்பு காலத்தில் மட்டுமாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை மத்திய மாநில அரசுகள் ஏன் கட்டாயமாக்கக் கூடாது?

10. பிரபலமானவர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், மருத்துவ ஆலோசகர்களை கொண்டு தாய்ப்பால் ஊட்டுவதின் முக்கியத்துவத்தை பணிக்கு செல்லும் பெண்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஏன் விளம்பரப்படுத்தக் கூடாது?

11. ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் உள்ளதுபோல தாய்ப்பால் ஊட்டுவதை கட்டாயமாக்கும் வகையில் ஏன் மத்திய அரசு ஏன் சட்டமாக்க கூடாது?

12. குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் விளம்பரப்படுத்துவதை தடை விதிக்கும் சட்டப் பிரிவுகள் முறையாக. அமல்படுத்தப்படுகிறதா?

13. பொது இடங்களில் தாய்ப்பால் தருவதற்கு தனி அறை அமைக்க சட்டம் இயற்றபடுமா?

என்பன உள்ளிட்ட 13 கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், ஜனவரி 22-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, மருத்துவப் படிப்பை முடித்து சிவகாசியில் உள்ள சித்தூர்ராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி மருத்துவராக 2015 மார்ச் 20-ல் பணியில் சேர்ந்த ஐஸ்வர்யா, அதே ஆண்டு ஜூலை முதல் ஜனவரி வரை 6 மாத மாதம் பேறு கால விடுப்பு எடுத்திருந்தார். மருத்துவப் மேற்படிப்பில் சேர 2 ஆண்டு கால பணியைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு செய்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவ மேற்படிப்பில் சேர கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இடம் கிடைத்தது. ஆனால் 2 ஆண்டு கால பணியை முழுமையாக நிறைவு செய்யவில்லை என சிவகாசி சுகாதார சேவை துணை இயக்குனர் அவரைப் பணியில் இருந்த விடுவிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். இதனால் அவரின் சேர்க்கையை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ரத்து செய்தது. இதை எதிர்த்து ஐஸ்வர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தபோது, ஐஸ்வர்யா தற்காலிக பயிற்சியாளர் என்பதால் அவரின் பேறுகால விடுமுறையை கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஏற்கெனவே மருத்துவ மேற்படிப்பிற்கு ஐஸ்வர்யா முழு தகுதி பெற்றிருப்பதால் , அடுத்த ஆண்டு அவர் மருத்துவ மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்காமல் தேர்வு செய்ய உத்தரவிட்டார். சட்டம் இயற்றுவது மட்டும் அரசின் கடமை இல்லை, அதனால் உரியவருக்கு பலன்கள் கிடைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Articles

வகுப்பறையில் மாணவர்கள் இயல்பாக பேசட்டும், பேச்சில்தான் சுகம்!
Jan, 10, 2025
இந்தியாவில் அதிகம் புரிந்து கொள்ளப்படாத மாமேதை - மன்மோகன் சிங்!
Jan, 02, 2025
மன அழுத்தத்தை குறைக்கும் மெல்லிசை பாடல்கள்!
Dec, 16, 2024
நிகழ் காலம் சரியாக இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
Nov, 28, 2024
பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?
Mar, 21, 2024

Important Websites

TN GOVT DA TABLE மருந்தில்லா மருத்துவம் காமராசரின் அரிய புகைப்படங்கள் TEACHERS RECRUITMENT BOARD TNPSC EMPLOYMENT EXCHANGE CPS WEBSITE CPS Account Slip EMIS GPF Account Slip Website Three Types of Certificates Laptop Online Entry Digital locker BANK IFSC & MICR CODE PAY EB BILL ONLINE SCHOLARSHIP Central Education Loan Site OnLine APPLY NEW RATION CARD DATA CENTRE INCOMETAX e-FILING Online Complained to Police Station DGE Site BIN VIEW NEW TEXT BOOK TNSCHOOLS TNSCERT IFHRMS EPAY ROLL INSPIRE AWARD CHITTA PATTA VIEW TNTP DGE NEW KalviGuru's Blog Gurukulam DoTE Prof.Tax Online PPO Intimation

Quick Links

Student Zone Teacher Zone Govt. Orders Forms District News Articles Technology Quotes Motivational Videos Biography Online Test Mutual Transfer Study Material About Us Contact Us
WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Condition
Copyright © 2025. All rights reserved by Kalviguru.com. Designed by: Tycoon Pacific