ஆசிரியர் தகுதி தேர்வு (TET2) 2 ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு..
ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வான TET இரண்டாம் தாளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதித்தேர்வான டெட் தேர்வை எழுத 4,லட்சத்து 1886 பேர் பதிவு செய்திருந்தனர்.
பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 வரை கணினி வழியில் டெட் தேர்வுகள் காலை மற்றும் மாலை என்று இருவேளைகளில் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முடிவுகளை https://www.trb.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம். View Press Release Click Here